தேர்தல்

தேர்தல்
தேர்தல் 
நன்றாகக் களைகட்டுகிறது...
தலைமை வேட்பாளரின்
சொத்து மதிப்பு வெளியீடப்படுகிறது...
சந்தோசம்...
ஆனால்; 
எதிர்த்தரப்பு வேட்பாளரின் சொத்து மதிப்பு மட்டும்தான் வெளியீடுகிறார்கள்..
ஆச்சரியம்...
எப்பொழுது ,
தாங்களாகவே 
தங்கள் சொத்து மதிப்பை வெளியீடுவார்கள்?
தமிழ்த்தேசிய மக்களே....

யார் விழிக்கிறார்கள்?
மாற்று மொழி படிக்காதே என்றவர்கள்...
ஓய்வூதியம் பெறும் காலத்தில்
பொழுது போக்கிற்காக அரசியல் விற்பவர்கள்...
யாரோ வீட்டுப்பிள்ளைகள்
போர்க்களத்தில்
தங்கள் உயிர் கொடுத்தார்கள்;
மிச்சம் மிகுதி
இவர்கள் கம்பனியில் 
அடிமைகளாய்
பத்துக்கும் ஜந்துக்கும்
கையேந்த வேண்டுமாம்...

சாதிய படிமங்கள்
கரைந்து போக வேண்டுமென்று
உங்களிடத்தில்
தொண்டை கிழிய கத்தி; 
கடைப்பொருள் தின்னும்
இவர்கள்...
தொட்டில் கட்டி.. 
பாலூட்டி...
சாதீய சமூகப் படிமங்களை
வளர்ப்பார்கள்
தங்கள் அரசியல் கம்பனிக்குள்..

Leave a Reply